Friday, August 15, 2008

வளமான பாரதம் வார்க்க - வாருங்கள் தோள் கொடுப்போம்

"தீவிரவாதத்தை வேரறுப்போம்" - கண்ணாடி கூண்டில் நின்று பிரதமர் கர்ஜனை!
"சாதிகள் இல்லையடி பாப்பா" - பள்ளி கழிவறையை சுத்தம் செய்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள்
"பட்டினி சாவு அதிகரிப்பு" - திருப்பதி சாமிக்கு 5 கோடி கிரீடம் அன்பளிப்பு
வெடிகுண்டு பலி செய்திகள் - எங்களுக்கு திடீரென வந்து தூறும் மழை !
கொஞ்ச நேரம் மண்வாசனை - பின்னர் மறந்து போவோம்!
நல்லவர்கள் கொஞ்சம் பேர் இருப்பதாலேயே
இன்னும் இருக்கிறது எங்கள் இந்திய நாட்டுக்கு இதய துடிப்பு !
வளமான பாரதம் வார்க்க - வாருங்கள் தோள் கொடுப்போம்
ஊழலுக்கு நிரந்தர உறக்கம் கொடுத்து,
சாதி மத சாக்கடையை அன்பு நீர் ஊற்றி அகற்றி,
தீவிரவாதத்திற்கு திதி செய்வோம் - இனி ஒரு புது யுகம் செய்வோம்!
- க.சு.செந்தில் குமார்.

1 comment:

kriti Trivedi said...

Y dont you write in english :(
its tough for me to get this